கேரளாவில் கனமழை ..இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
By: vaithegi Tue, 05 Sept 2023 4:18:55 PM
கேரளா: பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும், ஆந்திர கடற்கரையோர மற்றும் தெலுங்கானாவில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்தது.
இதையடுத்து அதில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளில் 12-20 செ.மீ மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று எர்ணாகுளம் மற்றும் இடுக்கி பகுதிகளில் கனமழை எச்சரிக்கை வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த பகுதிகளுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன.
மேலும் அப்பகுதிக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மாநிலத்தின் சில பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.