- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ,3 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு ... ஆரஞ்சு அலர்ட் விடுப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ,3 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு ... ஆரஞ்சு அலர்ட் விடுப்பு
By: vaithegi Sat, 29 Oct 2022 3:15:51 PM
சென்னை: வரும் நவம்பர் 1 ,3 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு .... தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இதனை அடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில் தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் வரும் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
மேலும், 3ஆம் தேதியை அடுத்து தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும், அதன் பிறகு மீண்டும் அதிகரிக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.