Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

By: vaithegi Mon, 31 Oct 2022 09:59:38 AM

திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை  மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை: மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட் .... வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது.

மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

orange alert,thiruvallur,kancheepuram,ranipet ,ஆரஞ்சு அலர்ட்,திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை

அதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,

இதையடுத்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Tags :