ஆரஞ்சு அலர்ட்... கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By: Nagaraj Tue, 14 Nov 2023 1:27:06 PM
கடலூர்: இன்று விடுமுறை... கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (14-ம் தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 14ம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் விடுமுறை அறிவித்துள்ளார்.