Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆற்றில் அமைக்கப்பட்ட கால்பந்து நட்சத்திர வீரர்கள் கட்அவுட்டை அகற்ற உத்தரவு

ஆற்றில் அமைக்கப்பட்ட கால்பந்து நட்சத்திர வீரர்கள் கட்அவுட்டை அகற்ற உத்தரவு

By: Nagaraj Sun, 06 Nov 2022 9:21:25 PM

ஆற்றில் அமைக்கப்பட்ட கால்பந்து நட்சத்திர வீரர்கள் கட்அவுட்டை அகற்ற உத்தரவு

கேரளா: ஆற்றில் அமைக்கப்பட்ட மெஸ்ஸி மற்றும் நெய்மரின் கட்அவுட்களை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கால் பந்து ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். இவர்கள் பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் கால் பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்து உள்ளனர்.

அந்த அடிப்படையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால் பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட்டை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.

cutout,removal order,foot ball,fans,messi ,கட்அவுட், அகற்ற உத்தரவு, கால் பந்து, ரசிகர்கள், மெஸ்ஸி

இது வைரலாகியதை அடுத்து மற்ற வீரர்களின் ரசிகர்களும் இது போன்று கட்அவுட் அமைக்க முடிவு செய்தனர். அந்த வகையில் பிரேசில் கால் பந்து ஜாம்பவன் நெய்மருக்கு அவரது ரசிகர்கள் அதே செரு புழா ஆற்றில் கட்அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட் மெஸ்சியின் கட்அவுட்டை விடவும் 10 அடி உயரமாக அதாவது, 40 அடியில் நிறுவப்பட்டது.


இவ்வாறு அங்கு அடுத்தடுத்து மெஸ்சி, நெய்மரின் கட்அவுட்கள் காணப்படுவது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரின் புகாரை அடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags :
|
|