Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்க உத்தரவு

தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்க உத்தரவு

By: Monisha Mon, 05 Oct 2020 6:50:26 PM

தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்க உத்தரவு

கொரோனாவை தடுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவேக்சின், ஜைகோவ்- டி, இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு ஆகிய 3 தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.)உருவாக்கிய கோவேக்சின், விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்த நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் நேற்று சமூக ஊடகங்களில் பின் தொடர்பவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருத்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.

அப்போது 25 கோடி பேருக்கு 40 முதல் 50 கோடி டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முன்னுரிமை பட்டியலை தயாரித்து வழங்க உத்தரவிடப்படும். அதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது என்று கூறினார்.

tamil nadu,vaccines,corona virus,covaxin,covshield ,தமிழ்நாடு,தடுப்பூசிகள்,கொரோனா வைரஸ்,கோவேக்சின்,கோவிஷீல்டு

இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் எவ்வளவு? கொரோனா வைரசை எதிர்த்து களப்பணியாற்றும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படஉள்ளது. இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உடனடியாக தேவைப்படும் தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கும் படி ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து முதல்- அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதில் மருந்து நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள். இதில் எவ்வளவு தடுப்பு மருந்து தேவை, அதை பாதுகாக்கவும் மக்களுக்கு வழங்கவும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் எவை? என்பது குறித்து மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கப்படும்.

Tags :