Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து கழகத்தில் உள்ளன் காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை

போக்குவரத்து கழகத்தில் உள்ளன் காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை

By: vaithegi Thu, 16 Feb 2023 10:36:31 AM

போக்குவரத்து கழகத்தில் உள்ளன் காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை

சென்னை:தமிழக அரசு அதிரடி உத்தரவு .... ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து அதில், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுனர் பணியிடங்களையும்,

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ordinance,transport corporation ,அரசாணை,போக்குவரத்து கழகம்

இதையடுத்து இந்த பணிக்கு கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.சி. ஓபிசி, எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த காலி பணியிடங்களை நிரப்பு சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :