நினைவேந்தல் பதாதைகள் அகற்றப்பட்டதால் ஏற்பாட்டுக்குழுவினர் அதிர்ச்சி
By: Nagaraj Fri, 18 Nov 2022 11:00:52 PM
மட்டக்களப்பு: மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது.
நேற்று இவை அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்திற்கு ஏற்பாட்டுக் குழுவினர் சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் தங்களது அதிருப்தியினையும் கவலையினையும் வெளியிட்டனர்.
மேலும்
கடந்த 15ம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில்
காட்சிப்படுத்தப்பட்ட நினைவேந்தல் பதாதை இதேபோன்று அகற்றப்பட்டிருந்ததைமை
குறிப்பிடத்தக்கது.
Tags :
anxiety |
grief |