மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 600 பேர் பலி
By: Monisha Sun, 28 June 2020 1:15:54 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.98 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 600 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 25,770 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் கொரோனா தொற்று ஒருப்பக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 25,770 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் கொரோனா இறப்பு கடந்த வாரம் 21,000 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒருவாரத்தில் 5,000 பேர்வரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை அடுத்து பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பலி அதிகமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.