Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

By: vaithegi Wed, 20 July 2022 5:19:35 PM

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு உயர்ந்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் வெப்பக்காற்று வீசி வருகிறது. வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்ப அலையை எதிர் கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் வெப்ப நிலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இவ்வாறான வெப்ப நிலையை சந்திப்பது பலருக்கும் பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.

heat,european country,increase ,வெப்பம்,ஐரோப்பிய நாடு,அதிகரிப்பு

மேலும் 2019ம் ஆண்டு லண்டன் மாநகரம் அதன் உட்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்சியஸை எட்டியது. தற்போது வீசிவரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இத்தகைய வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் முதல் ரெட் அலெர்ட் நிலையில் உள்ள லண்டன் நகரில், பெரும்பாலான ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் உணவும், பார்பிக்யூ போன்ற உணவுகளை வெளியே சமைப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|