பட்டுக்கோட்டை அருகே ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்
By: Nagaraj Thu, 11 May 2023 08:01:48 AM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சூராங்காடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து வயது(. 32 ).இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வீரமுத்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை அவரது மனைவி கோமதி மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகில், பட்டுக்கோட்டையிலிருந்து வெண்டாக்கோட்டை செல்லும் சாலையில் வீரமுத்து ரத்த காயத்துடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து பொது மக்கள் பட்டுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீரமுத்து உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீரமுத்துவின் மனைவி கோமதி பட்டுக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். வீரமுத்துவை யாரும் அடித்து கொலை செய்தார்கள? அல்லது வேறு காரணமா? என பலகோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.