Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளித்த பாகிஸ்தான்

உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளித்த பாகிஸ்தான்

By: Nagaraj Mon, 14 Aug 2023 7:39:26 PM

உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது... இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால், மருந்து, உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை சமாளிக்க 3 பில்லியன் டாலர் கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

import,india,pakistan,permit,pharmaceuticals, ,அனுமதி, இந்தியா, இறக்குமதி, பாகிஸ்தான், மருந்துகள்

இதுகுறித்து, பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இறக்குமதி கொள்கை ஆணை 2022ன் கீழ், இந்தியாவில் இருந்து உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. அவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடையில்லா சான்று(என்.ஓ.சி.) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|