Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானுக்கு உலகில் உண்மையான அடையாளம் இல்லை... முதல்வர் யோகி கருத்து

பாகிஸ்தானுக்கு உலகில் உண்மையான அடையாளம் இல்லை... முதல்வர் யோகி கருத்து

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:19:57 AM

பாகிஸ்தானுக்கு உலகில் உண்மையான அடையாளம் இல்லை... முதல்வர் யோகி கருத்து

லக்னோ :பாகிஸ்தான் பூமிக்கு பாரம் என்றும், பாகிஸ்தானுக்கு உலகில் உண்மையான அடையாளம் இல்லை என்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் இந்து மதம், இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ஆன்மிக உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான அடையாளம் இல்லை.

ஒன்று உண்மையாக இல்லாதபோது அது நீண்ட காலம் நீடிக்காது .இந்து மதம் என்பது ஒரு மதமோ,நம்பிக்கையோ அல்ல. இந்து என்பது ஒரு கலாச்சாரப் பெயர்.

comment,hindu religion,yogi adityanath, ,இந்து மதம், கருத்து, யோகி ஆதித்யநாத்

இந்து அடையாளம் என்பது ஒவ்வொரு இந்தியனின் கலாச்சார குடியுரிமை. இந்தியாவில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் இந்துக்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்தியர்களை ஹாஜிகளாக யாரும் பார்ப்பதில்லை. அவர்களை யாரும் முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தியா ஒரு இந்து நாடு என்பது தெளிவாகிறது. ஏனெனில் இங்குள்ள குடிமக்கள் அனைவரும் இந்துக்கள். நாம் இந்து மதத்தை மதம், நம்பிக்கை மற்றும் பிரிவுடன் தொடர்புபடுத்தினால், நாம் புரிந்துகொள்வதில் தவறு செய்கிறோம்” என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

Tags :