இம்ரான்கான் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
By: Nagaraj Mon, 27 Mar 2023 5:26:40 PM
பாகிஸ்தான்: இம்ரான் கானின் நடவடிக்கைகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அமைச்சர் ரானா சன உல்லா-வும், ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையின் உயரதிகாரி ஒருவருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் கூறிவருகிறார்.
பாகிஸ்தானில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ. மீது இம்ரான் கான் நேரடியாக குற்றம் சுமத்திவருகிறார். இந்நிலையில் இம்ரான் கானின் நடவடிக்கைகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
அவரது நடவடிக்கைகளால் தங்களது உயிருக்கும் சேர்த்து ஆபத்தை ஏற்படும் நிலை உள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சன உல்லா கூறியுள்ளார்.
Tags :
jeopardy |
minister |
life |