Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் கடற்படை

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் கடற்படை

By: Nagaraj Mon, 10 Oct 2022 09:28:27 AM

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் கடற்படை

போர்பந்தர்: பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு... குஜராத் மாநிலம் ஜகாவ் கடற்கரையில் கடந்த 6ஆம் தேதி மாலை 5 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் ஹர்சிதி என்ற படகில் இந்திய மீனவர்கள் 7 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் கடற்படையின் படகில் வந்த கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

படகை மூழ்கடித்து மீனவர்களை பிடித்து அவர்களது படகில் கடத்திச் சென்றனர். அடித்து, உதைத்து, மிரட்டி, பின் விடுவித்தனர்.

complaint,fishermen,pakistan navy,police ,குஜராத் மாநிலம், மீனவர்கள், போர்பந்தர், வழக்குப் பதிவு

புகாரைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறை 20-25 பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல், சேதப்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் போர்பந்தர் மாவட்ட சிறப்பு போலீஸ் அதிரடி குழு சப்-இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவி மோகன் சைனி தெரிவித்தார்.


Tags :