Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயங்கரவாதிகள் விஷயத்தில் இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்

பயங்கரவாதிகள் விஷயத்தில் இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்

By: Nagaraj Mon, 21 Sept 2020 4:53:03 PM

பயங்கரவாதிகள் விஷயத்தில் இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை இந்தியாவும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பல பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் இன்னும் விஐபி அந்தஸ்து அளித்து வருவதாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாதத்தை தடுக்க முயற்சிப்பதாக ஒரு பக்கம் கூறிவிட்டு, மறுபக்கம் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக பாகிஸ்தான் மீது உலகளவில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தை இந்தியாவும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்காக FATF எனப்படும் நிதி நடவடிக்கை படை அமைப்பு இயங்கி வருகிறது. FATF அமைப்பின் கிரே பட்டியலில் 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது.

பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானுக்கு FATF காலக்கெடு விதித்துள்ளது. இந்த காலக்கெடுவை மீறினால் பாகிஸ்தானை FATF தனது கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிடும். இப்படி பாகிஸ்தானின் தலை மீது FATF அமைப்பின் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கும்போது, பயங்கரவாதிகளுக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து வருகிறது பாகிஸ்தான்.

pakistan. terrorists,double role,india ,பாகிஸ்தான். பயங்கரவாதிகள், இரட்டை வேடம், இந்தியா

FATF நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது போல் நடித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம் 88 பயங்கரவாத தலைவர்களுக்கும், பயங்கரவாதக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதில், மசூத் அசார், ஹஃபிஸ் சயீத் அகமது, ஜகியுர் ரெஹ்மான் லக்வி, இப்ராகிம் உள்ளிட்ட பெரும் பயங்கரவாத தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இன்னும் பல பெரிய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் விஐபி அந்தஸ்து கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதில் தாவூத் இப்ராகிம், வத்வா சிங், ரஞ்சீத் சிங் நீத்தா, ரியாஸ் பட்கால் ஆகியோரும் அடங்குவர்.

பாகிஸ்தான் விஐபி அந்தஸ்து வழங்கியுள்ள பயங்கரவாதிகளில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பலரும் இந்தியாவின் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :