பஞ்சாப் மாநில எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
By: Nagaraj Mon, 26 Dec 2022 10:10:02 PM
காஷ்மீர்: பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் பஞ்சாப் மாநில எல்லையில் ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவுக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை அனுப்புவதை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
எல்லையில் அத்துமீறி நுழையும் ஆளில்லா விமானங்களை கண்காணிக்க ராணுவ
வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற
பாகிஸ்தானின் 3 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில்
நேற்று இரவு பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் பஞ்சாப் மாநில எல்லையில்
ஊடுருவியது.
இதையறிந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர்
உஷார்படுத்தினர். அவர்கள் ட்ரோனை நோக்கி சுட்டனர். ஆளில்லா விமானம்
பாகிஸ்தானுக்கு திரும்ப முயன்றது. ஆனால், இந்திய வீரர்கள் ஆளில்லா
விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.
அமிர்தசரஸ் அருகே ராஜதாலில் ஆளில்லா
விமானம் விழுந்து நொறுங்கியது. ஆளில்லா விமானத்தில் பயங்கர ஆயுதங்கள்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர்
பறிமுதல் செய்தனர்