Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்; கல்வித்துறை அறிவிப்பு

மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்; கல்வித்துறை அறிவிப்பு

By: Monisha Tue, 29 Sept 2020 10:13:30 AM

மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்; கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம் என்றும், அதேபோல் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணிக்கு வரலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு விருப்பத்தின் பேரில் வர அனுமதி என்று அரசு தெரிவித்தது போல, மாணவர்களை சுயவிருப்பத்தின் பேரில் தான் அனுப்பிவைக்கிறோம் என்று பெற்றோரும் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிப்பது போன்ற ஒரு கடிதத்தையும் உருவாக்கியுள்ளது. அதில், "1.10.2020 முதல் பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எனது சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

school,students,parents,approval letter,department of education ,பள்ளி,மாணவர்கள்,பெற்றோர்,ஒப்புதல் கடிதம்,கல்வித்துறை

இந்த வாசகத்துக்கு கீழ் பெற்றோர் தங்களுடைய கையொப்பத்தை இடவேண்டும். மேலும் வீட்டு முகவரி, செல்போன் எண், வாட்ஸ்-அப் எண் ஆகியவற்றையும் அதில் தெரிவிக்க வேண்டும்.

இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இது குறித்து இன்னும் பள்ளிகளுக்கு எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வந்து சேரவில்லை. அப்படி வரும்போது அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை அனுமதிப்போம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்து தான் வருகின்றனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையே இன்னும் சில மாணவர்கள் வாங்க வரவில்லை" என்றார்.

Tags :
|