Advertisement

தொடர்ந்து 4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

By: vaithegi Tue, 25 July 2023 12:51:47 PM

தொடர்ந்து 4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்


இந்தியா: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு .. மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே பெரிதும் உலுக்கியது.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

parliament,opposition ,நாடாளுமன்றம்,எதிர்க்கட்சி


எனவே இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 3 நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இன்றும் 4-வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது. மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோன்று மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். a

Tags :