Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

By: Karunakaran Mon, 06 July 2020 2:06:21 PM

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

சீனாவில் தோன்றிய காரோண வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென் கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது அங்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அந்த நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வாக்குரிமை பெற்ற 30 லட்சத்து 85 ஆயிரம் பேருக்காக நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

parliamentary elections,croatia,coronavirus,threat ,நாடாளுமன்றத் தேர்தல்கள், குரோஷியா, கொரோனா வைரஸ், அச்சுறுத்தல்

கொரோனா பீதிக்கு மத்தியிலும் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்தனர். முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தங்களது வாக்கை மக்கள் செலுத்தினர்.

100க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இருப்பினும், ஆளும் பழமைவாத குரோஷிய ஜனநாயக கூட்டமைப்பு கட்சிக்கும், சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கு 56 இடங்களும், குரோஷிய ஜனநாயக கூட்டமைப்பு கட்சிக்கு 55 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags :