Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகர்கோவில் வழி திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

நாகர்கோவில் வழி திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

By: vaithegi Tue, 14 Mar 2023 10:17:27 AM

நாகர்கோவில் வழி திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

சென்னை: ரயில் பாதை பணிகள் காரணமாக நாகர்கோவில் வழி திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ... தென் தமிழக மாவட்ட ரயில்வே கோட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ரயில் பாதை பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு வருகின்றன.

மதுரை ரயில்வே கோட்ட பணிகள் காரணமாக ரயில் நிறுத்தங்கள் மற்றும் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பான நேரத்தில் வழக்கம்போல இயங்கி கொண்டு வருகிறது.

trains,nagercoil,thiruvananthapuram ,ரயில்கள் , நாகர்கோவில் ,திருவனந்தபுரம்

இந்த நிலையில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் மேலப்பாளையம் – நாங்குநேரி இடையே இரட்டை ரயில் பாதை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் நாளை மறுதினம் (மார்ச் 16) முதல் மார்ச் 21-ம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும், நாகர்கோவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று திருச்சி – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் மார்ச் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், மறுமார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|