Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐதரபாத்தில் 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் பாஸ்

ஐதரபாத்தில் 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் பாஸ்

By: Karunakaran Fri, 31 July 2020 12:51:48 PM

ஐதரபாத்தில் 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் பாஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் நடைபெறவிருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதன்பின் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை என்பதால், அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நூருதீன் என்ற 51 வயதுடைய நபர், கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார்.

10th exam,english,hyderabad,51-year-old student ,10 வது தேர்வு, ஆங்கிலம், ஹைதராபாத், 51 வயது மாணவர்

33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் மட்டும் நூருதீன் பெயிலாகி வந்தார். இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறிவிட்டதால், அனைத்துப் பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார்.

தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பாஸ் என தெலுங்கானா அரசு அறிவித்ததால், நூரூதினும் ஆல் பாஸ் ஆகிவிட்டார். இதனால் அவர், முதல் மந்திரி சந்திரசேகர ராவிற்கு நன்றி தெரிவித்தார்.

Tags :