பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து
By: Nagaraj Fri, 28 July 2023 8:34:35 PM
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சில் பயணிகள் ஒரு பக்கமாக நின்றதால் கடலில் படகு கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியதால் பீதியடைந்த பயணிகள் படகின் ஒரு பக்கத்திற்குச் சென்ற போது விபத்து நேரிட்டதாக பினாங்கோனன் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Tags :
boat |
count |
crash |