Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை புறநகர் ரயில்கள் ரத்தால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்

சென்னை புறநகர் ரயில்கள் ரத்தால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்

By: vaithegi Tue, 18 July 2023 10:55:52 AM

சென்னை புறநகர் ரயில்கள் ரத்தால்  பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்

சென்னை : ரயில்கள் ரத்தால் பயணிகள் அவதி ..... சென்னை புறநகர் ரயில்களின் புதிய அட்டவணைப்படி 26 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டதை கண்டு பயணிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவள்ளூர் முதல் ஆவடி வரை செல்லும் 8 ரயில்கள், தாம்பரம் முதல் செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் 9 ரயில்கள் , பறக்கும் ரயில் தடத்தில் செல்லும் 9 ரயில்கள் என்று மொத்தமாக 26 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

trains,passengers ,ரயில்கள் ,பயணிகள்


எனவே இதன் காரணமாக வேலை முடிந்து வில்லிவாக்கம் ,அம்பத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களிலிருந்து வீடு திரும்பும் பயணிகள், சென்னை கடற்கரை - அரக்கோணம் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து இது பற்றி கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள் , இரவு நேரங்களில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஒரு சில மாதங்களில் ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தகவல் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|