Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாதததால் பயணிகள் அவதி

தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாதததால் பயணிகள் அவதி

By: Nagaraj Tue, 23 May 2023 11:19:29 AM

தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாதததால் பயணிகள் அவதி

சென்னை: பயணிகள் புகார்... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கோடை விடுமுறையையொட்டி ஏராளமான பயணிகள் பேருந்துக்காக நள்ளிரவு வரை காத்திருந்தனர். மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

passengers,adequacy,bus,southern districts,charge ,பயணிகள், போதிய அளவு, பேருந்து, தென் மாவட்டங்கள், குற்றச்சாட்டு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில நாட்களாகவே இதுபோன்ற பல மாவட்டங்களிலும் போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags :
|