சீனா உள்ளிட்ட அயல்நாட்டு விமான பயணிகளுக்கு கடும் சோதனை
By: vaithegi Fri, 30 Dec 2022 9:14:17 PM
இந்தியா: உலக நாடுகளில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரம் ... சீனாவில் தற்போது பரவி வரும் BF.7 வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிக வேகத்திலும், அதிக வீரியத்துடனும் உலக நாடுகள் மத்தியில் பரவி கொண்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு வருகிறது.
எனினும், வைரஸ் பாதிப்பு மிகவும் அதிக எண்ணிக்கையில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உலக நாடுகளில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த நிலையில், மலேசியா நாட்டில் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால், அங்கு தொற்று பாதிப்பு விரைவில் பரவி விடும் அபாயம் இருப்பதால் நாட்டிற்குள் வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் கொரோனா தொற்று சோதனை செய்ய அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக சீனா விமானங்களில் இருந்து கழிவுநீரை பரிசோதிக்க உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். இதைபோல், பல கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அமலாகும் தேதிகள் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.