பயணிகளை தரக்குறைவாக நடத்த கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை..
By: Monisha Mon, 04 July 2022 8:31:04 PM
தமிழ்நாடு: பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துதுறை எச்சரித்துள்ளது. பெண் பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் " சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்கும்போது மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள் என்று புகார்கள் வந்துள்ளது. அதனால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை முறை கேடாக நடத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவராகவோ நின்றால் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுனர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் நிறுத்த கூடாது . மேலும் இடம் இல்லை பேருந்தில் என்று அவர்களை இறக்கி விடவோ மற்றும் அவர்களை எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ நடந்து கொள்ள கூடாது. வயது முதிரிந்த பயணிகளை இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து அவர்களை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தை பக்கவாட்டில் நிறுத்தாமல் சரியாக நிறுத்த வேண்டும் . கதவை மூடிய நிலையில் ஒற்றை வேண்டும்.
ஓட்டுனர் இடது பக்கவாட்டு கண்ணாடி மூலம் பயணிகள் உஷாராக கவனித்து பேருந்தை இயக்க வேண்டும். மற்றும் மாணவர்கள், முதியோர்கள்,மாற்று திறனாளிகள் மீது தனி கவனம் மேற்கொள்ள வேண்டும். கதவுகள் இல்லாத பேருந்தில் தொங்கியபடி செல்ல அனுமதிக்க கூடாது.
முக்கியமாக பேருந்து புறப்பட்ட பின் ஓடி வந்தால் பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் . பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன் குரல் குடுக்க வேண்டும் எந்த இடம் என்று. ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேருந்தில் செல்போன்பயன்படுத்த கூடாது. இதை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்க படும் என்று கூறியுள்ளனர்.