Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சொத்து வரியை 15ம் தேதிக்குள் கட்டுங்க... 5 சதவீதம் சலுகை பெறுங்கள்

சொத்து வரியை 15ம் தேதிக்குள் கட்டுங்க... 5 சதவீதம் சலுகை பெறுங்கள்

By: Nagaraj Wed, 05 Oct 2022 9:16:43 PM

சொத்து வரியை 15ம் தேதிக்குள் கட்டுங்க... 5 சதவீதம் சலுகை பெறுங்கள்

சென்னை: அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

2022- 23 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூபாய் 945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

chennai,corporation,notification,property tax,offer,collection ,சென்னை, மாநகராட்சி, அறிவிப்பு, சொத்துவரி, சலுகை, வசூல்

இந்த நிலையில், கடந்த முதல் அரையாண்டை விட 208 கோடி ரூபாய் அதிகம். அதே போல் தொழில்வரி ஆனது 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சலுகை அறிவிப்பு இதேபோல் தொடருமா என்ற கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

Tags :
|