Advertisement

குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

By: Nagaraj Wed, 28 Oct 2020 10:25:15 PM

குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

38 பேருக்கு பிசிஆர் பரிசோதனை... யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கே இன்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

medical officer,fish market,pcr,examination ,வைத்திய அதிகாரி, மீன் சந்தை, பிசிஆர், பரிசோதனை

இதன்படி, வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கடமையாற்றிய நிறுவன ஊழியர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குருநகரின் பாசையூர் சந்தைப்பகுதியில் எழுமாற்றாகத் தெரிவுசெய்யப்பட்ட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சுகாதார தொழிலாளிகள் ஏழு பேரும் குறித்த 38 பேரில் உள்ளடங்குவதாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|