Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

By: Nagaraj Mon, 26 Oct 2020 2:16:06 PM

மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

பிசிஆர் பரிசோதனை... மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த பரிசோதனை முதற்கட்டமாக 50 பொலிசாருக்கு மட்டக்களப்பு பொலிஸ் விடுதியில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்கள் திணைக்களங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களில் நேரடியாக பொதுமக்களுடன் கடமை நிமித்தம் தொடர்புடையவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

police officer,pcr,examination,batticaloa ,பொலிஸ் உத்தியோகத்தர், பிசிஆர், பரிசோதனை, மட்டக்களப்பு

இதற்கமைய நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அந்தவகையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஜி.உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. கே ஹெட்டிஹாராச்சி தலைமையில் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவினால் முதற்கட்டமாக சுமார் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags :
|