Advertisement

மக்கள் மகிழிச்சி.. மக்கள் சிரமம்.. வெளுத்துகட்டிய மழை..

By: Monisha Mon, 20 June 2022 9:42:13 PM

மக்கள் மகிழிச்சி.. மக்கள் சிரமம்.. வெளுத்துகட்டிய மழை..

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டித்திர்த்த மழை. இன்றும் நீடித்த மழை. சென்னை, போரூர்,குன்றத்தூர், கொரட்டூர் என பல இடங்களில் கொட்டி தீர்த்த மழை. மழை பெய்து வருவதால் வெட்கை தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

மழை பெய்வதனால் அனைவரும் மகிழிச்சி அடைந்தாலும் ஒரு பக்கம் வாகனம் ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்த மழை. இரவு 10.30 மணி முதல் தொடங்கி விடியற்காலை மூணு மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைஓரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை செல்கின்ற அனைவரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

rain,happy,trouble,road ,மழை, பள்ளம், வெப்பம், குளிர்ச்சி

நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இன்று மாலை பெய்த மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.
அதை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதை அப்புறபடுத்தி வருகின்றனர். மேலும் இந்த மழை சில தினங்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.24 ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tags :
|
|