ஒரே நாளில் டில்லியில் 338 பேருக்கு கொரோனா; மக்கள் அதிர்ச்சி
By: Nagaraj Sat, 09 May 2020 08:38:39 AM
ஒரே நாளில் டில்லியில் புதிதாக 338 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி, பாதிப்புகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது.
தலைநகர் டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 338 பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரேனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,318 ஆக அதிகரித்தது. பலியானோரின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
Tags :
same day |
corona |