Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து திருச்சி, மதுரை செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

By: Nagaraj Fri, 05 May 2023 1:52:36 PM

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

சென்னை: போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி... சென்னையில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

traffic,buses,public,complaint,thiruvannamalai,peace ,போக்குவரத்து, பேருந்துகள், பொதுமக்கள், புகார், திருவண்ணாமலை, சமாதானம்

இந்நிலையில், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் பேருந்துகள் கிடைக்காமல் கோயம்பேட்டில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பேருந்துகளை இயக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசாரும், போக்குவரத்து ஊழியர்களும் சமாதானப்படுத்தினர்.

இதனிடையே, சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால் பிற ஊர்களுக்கு பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.

Tags :
|
|