குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை கற்களை வீசி மக்கள் துரத்தியதால் பரபரப்பு
By: Nagaraj Mon, 08 June 2020 8:24:42 PM
கிராமத்திற்குள் நுழைந்த கரடியை கற்களை வீசி மக்கள் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரிமரா ஹட்டி கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதிகளில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக கரடி ஒன்று குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு வருவதற்கு முயற்சி செய்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தேயிலை தோட்ட பகுதிக்கு வந்து கற்கள் வீசி கரடியை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை கண்ட கரடி தேயிலை தோட்டத்தில் இருந்து குடியிருப்பு பகுதி வழியாக அருகில் உள்ள புதருக்குள் சென்று பதுங்கிக்கொண்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடினால் அதை இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் கல்லை கொண்டு கரடியை அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.