Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை; மருத்துவர் சுதத் சமரவீர தகவல்

கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை; மருத்துவர் சுதத் சமரவீர தகவல்

By: Nagaraj Sat, 10 Oct 2020 3:01:34 PM

கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை; மருத்துவர் சுதத் சமரவீர தகவல்

மக்கள் பதற்றமடைய தேவையில்லை... கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று நோயியல் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில், தொற்றாளர்கள் கொத்தணி தற்பொழுது குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


action,doctor,garment factory,people panic ,நடவடிக்கை, மருத்துவர், ஆடைத் தொழிற்சாலை, மக்கள் பீதி

எவ்வாறெனினும், மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வைத்தியசாலை முறையில் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர் எனவும் சமூகத் தொற்றாக மாறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதனால் மக்கள் இது குறித்து பீதியடைந்துள்ளதாகவும் எவ்வாறெனினும், நோய் தொற்று சமூகத்திற்கு பரவுவதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Tags :
|
|