Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியை காண திரண்ட மக்கள்

சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியை காண திரண்ட மக்கள்

By: Nagaraj Tue, 17 Jan 2023 10:15:47 PM

சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியை காண திரண்ட மக்கள்

சென்னை: சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை 47,000 பேர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது.

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில் 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகள் உள்ளன. 70 ஆயிரம் சதுர அடியில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு சாதனைகள் உள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி கண்காட்சிக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 47,000 பேர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது.

chennai,exhibition,island, ,சென்னை, தீவுத்திடல், பொருட்காட்சி

மாட்டுப் பொங்கல் தினமான நேற்று 72,547 பேர் பார்வையிட்டனர். 58,518 பெரியவர்களும் 14,029 குழந்தைகளும் கண்காட்சியைப் பார்வையிட்டனர். பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளது.

காணும் பொங்கல் தினமான இன்று இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, குடும்பங்கள் திருவிழாவிற்கு வருவார்கள். இதனால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

Tags :
|