Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

By: vaithegi Thu, 08 Sept 2022 10:09:49 PM

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் மிக உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை கேரளாவில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கடந்த 30-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் மலையாள மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகள் ஓணம் பண்டிகை குமரியில் களையிழந்து காணப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓணம்பண்டிகை களைகட்டியது. அதன்படி திருவோணம் பண்டிகையான நேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

onam festival,kumari ,ஓணம் பண்டிகை ,குமரி

இதனை தொடர்ந்து தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளிலும், குமாரகோவில் வேளிமலை முருகன்கோவில், பத்மநாபபுரம் ராமசாமி கோவில், பெருமாள்கோவில், நீலகண்டசாமி கோவில் ஆகிய பல கோவில்களில் பக்தர்கள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு செய்தனர். இதோபோன்று வீடுகளின் முற்றத்தில் அத்தப்பூ கோலமிட்டும், புத்தாடை அணிந்து ஊஞ்சல் கட்டி ஆடியும் கொண்டாடினர்.

மேலும் ஓண சத்யா என்ற விசேஷ உணவுகளை சமைத்து பலவிதமான பாயாசத்துடன் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். சிலர் மாற்றுமத நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஓண விருந்து அளித்தனர். சில பகுதிகளில் இளைஞர் மன்றங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி ஓண விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Tags :