Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

By: vaithegi Sun, 15 Oct 2023 5:22:48 PM

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

புது டெல்லி: டெல்லியில் லேசான நிலநடுக்கம் ... ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. ஃபரிதாபாத், சஜ்ஜார், ஆக்ரா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

people,seismic,earthquake ,மக்கள் , நில அதிர்வு,நிலநடுக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் வீடுகளில் இருந்தபோதிலும், பூமி அதிர்ந்தவுடன் மக்கள் வெளியே ஓடி வந்தனர்.இதற்கு முன்னதாக அக்டோபர் 3 ஆம் தேதி தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் மேல் மேற்பரப்பு ஏழு டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags :
|