Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தஞ்சாவூரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தஞ்சாவூரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

By: Nagaraj Mon, 05 June 2023 10:14:13 AM

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தஞ்சாவூரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

தஞ்சாவூர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tearful tribute,train accident,thanjavur,civilians ,கண்ணீர் அஞ்சலி, ரயில் விபத்து, தஞ்சாவூர், பொதுமக்கள்

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் சிகிச்சை பெறுபவர்கள் பூரண நலம் பெறவும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனி பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வீடுகளிலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியபடி விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும், இனி இது போன்ற விபத்துகள் எதுவும் ஏற்படாத வண்ணம் இறைவன் காக்க வேண்டும் எனவும் இறைவனிடம் வேண்டி கொண்டனர்.

Tags :