Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து மக்கள் போராட்டம்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து மக்கள் போராட்டம்

By: Karunakaran Sat, 08 Aug 2020 11:15:06 AM

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து மக்கள் போராட்டம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 31-ந் தேதி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் அங்கு பெரும் பரபரப்ப்ய ஏற்பட்டது. தற்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஸ்பின் போல்டாக் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

protest condemning,pakistani military,offensive,afghanistan ,எதிர்ப்பு கண்டனம், பாகிஸ்தான் இராணுவம், தாக்குதல், ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகவும், அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, எதிர்காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டால் ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருங்காலங்களில் இதுபோன்ற மோதல்களை தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :