Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பணமதிப்பிழப்பு போன்றே டிக்டாக் தடையிலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் - மேற்குவங்காள எம்.பி.

பணமதிப்பிழப்பு போன்றே டிக்டாக் தடையிலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் - மேற்குவங்காள எம்.பி.

By: Karunakaran Sat, 04 July 2020 09:14:14 AM

பணமதிப்பிழப்பு போன்றே  டிக்டாக் தடையிலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் - மேற்குவங்காள எம்.பி.

லடாக் எல்லையில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதன்பின் எல்லையில் பதற்றம் நிலவியது. சீன பொருட்களை தடை செய்ய பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

சீனாவுடன் எல்லை மோதல் காரணமாக இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதன்பின் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் உள்பட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து மேற்கு வங்காள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கருத்து தெரிவித்துள்ளார்.

deflation,tiktok,west bengal mp,nusrat jahan ,பணமதிப்பிழப்பு, டிக்டோக், மேற்கு வங்காள எம்.பி, நுஸ்ரத் ஜஹான்

மத்திய அரசின் முடிவு குறித்து நுஸ்ரத் ஜஹான் கூறுகையில், இது மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் முடிவு. இதன் மூலம் எந்த விதமான யுக்திகள் உள்ளன? வேலை இல்லாமல் இருப்பவர்களின் நிலை என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த பாதிப்பு போன்று இப்போதும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தேச பாதுகாப்பு என்பதால் டிக்டாக்கை தடை செய்வதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் யார் கூறுவது என்று டிக்டாக் தடை குறித்து கூறியுள்ளார். சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டதால், மக்கள் தங்களது பொழுது போக்கான செயலிகள் இன்றி கவலையடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|