Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலைக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலைக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

By: Nagaraj Sat, 27 Aug 2022 08:27:38 AM

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலைக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் வரவேற்பு... நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்ததை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்ததை மக்கள் நீதி மய்யம் பெரிதும் வரவேற்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையடுத்து, அமரது தலைமையிலான அமர்வில் நடைபெறும் விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

Tags :