Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

By: Karunakaran Mon, 03 Aug 2020 1:31:54 PM

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று இந்த தடுப்பூசி பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 3 கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மும்பை, புனே போன்ற பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

indian drug control agency,inject,oxford vaccine,india ,இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம், ஊசி, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியா

தற்போது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் இன்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்ஒசி) சிறப்பு நிபுணர் குழு, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய சிரம் இன்ஸ்டிடியுட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இறுதி கட்ட பரிசோதனையில் சிரம் இன்ஸ்டிடியுட் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,600 பேருக்கு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Tags :
|