Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இ-பாஸ் இருந்தால்தான் அனுமதி; இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

இ-பாஸ் இருந்தால்தான் அனுமதி; இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

By: Nagaraj Sun, 06 Sept 2020 1:50:05 PM

இ-பாஸ் இருந்தால்தான் அனுமதி; இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

இ-பாஸ் இருந்தால்தான் அனுமதி... தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல "இ-பாஸ்" ரத்து என்று ஒரு நாளிதழ் மற்றும் ஒரு ஊடகம் ஆகியவற்றின் தவறான செய்தியால், தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி வந்தனர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் அவர்களை இ-பாஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினார். இதனால் 6 மாதங்களுக்குப் பிறகு கேரளாவுக்குள் வேலைக்கு செல்லலாம் என்று வந்த தொழிலாளர்கள் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

false news,e-pass,pliers,people,experiment ,தவறான செய்தி, இ-பாஸ், இடுக்கி, மக்கள், பரிசோதனை

இதுகுறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆவண சரிபார்ப்பு அதிகாரிகள் மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கம்போல் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து குமுளி வழியாக இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பிற ஊர்களுக்கு வருவோர், கேரளாவில் இருந்து தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் செல்வோர் "இ-பாஸ்" பெற்றுச் செல்லும் நடைமுறை அமலில் உள்ளது. தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று, தெரிவித்தனர்.

Tags :
|
|
|