Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி

By: Nagaraj Tue, 20 Sept 2022 08:33:44 AM

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி

சென்னை: திருமூர்த்தி அணையிலிருந்து இன்று 20ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


நீர் இருப்பைப் பொருத்து 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளதாவது:

lands,irrigation facility,water,permission,tamil nadu govt ,நிலங்கள், பாசன வசதி, தண்ணீர், அனுமதி, தமிழக அரசு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் , பூசாரிநாயக்கன் ஏரி பாசனப்பரப்பு பயனடையும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து, நீர் இருப்பைப் பொறுத்து 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு 20.09.2022 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.


இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|