Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கோர்ட்டில் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கோர்ட்டில் மனு

By: Nagaraj Mon, 20 June 2022 1:39:13 PM

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கோர்ட்டில் மனு

சென்னை: போலீஸ் பாதுகாப்பு வேண்டும்... அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: வரும் 23ம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் எனவும், போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

petition,urgent appeal,aiadmk general committee,security,police ,மனு, அவசர முறையீடு, அதிமுக பொதுக்குழு, பாதுகாப்பு, போலீஸ்

எனவே பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி ஜூன் 7ம் தேதி தமிழக டி.ஜி.பி., ஆவடி மாநகர காவல் ஆணையர், திருவேற்காடு காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்ததாகவும், அதன் மீது எந்த முடிவு எடுக்காததால் மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி நினைவூட்டு கடிதம் அனுப்பிய பின்னர், விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல், காவல்துறை காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.

எனவே ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனு வரும் புதன்கிழமை (ஜூன் 22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags :