Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி மனு ...இன்று விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி மனு ...இன்று விசாரணை

By: vaithegi Thu, 14 July 2022 08:54:01 AM

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி மனு ...இன்று விசாரணை

சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம்காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.

இச்சீலையை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக மனு தாக்கல் ஒன்று செய்தனர்.

investigation,admk ,விசாரணை,அதிமுக

இதன் இடையில், பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, தங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையீடு செய்தார்.

அதனையடுத்து நீதிபதி, அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கு என்பதால், இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார். மேலும், இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வருகிறது.

Tags :