Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

பாகிஸ்தானில் இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

By: Karunakaran Thu, 09 July 2020 12:01:48 PM

பாகிஸ்தானில் இந்துக் கோவில் கட்ட தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள எச்9 என்ற பகுதியில் இந்து கோவில் கட்டப்படவுள்ளது. இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது, பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இஸ்லாமாபாத்தில் இந்து கோவிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஒரு சிலர் இந்துக் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

pakistan,high court,hindu temple,dismiss ,பாக்கிஸ்தான், உயர் நீதிமன்றம், இந்து கோயில், தள்ளுபடி

இந்த மனுவில், கோவில் கட்டுவதற்கான நிலத்தைத் மூலதன மேம்பாட்டு ஆணையம் ஒதுக்குவதை ரத்து செய்ய வேண்டும். இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்திருந்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமீர் பாருக், இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நிலத்தை யாருக்கு எதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை மூலதன மேம்பாட்டு ஆணையமே முடிவு செய்யும். அதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று நீதிபதி அமீர் பாருக் கூறினார்.

Tags :