Advertisement

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் இன்று தொடக்கம்

By: vaithegi Thu, 16 Feb 2023 10:46:23 AM

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் இன்று தொடக்கம்

சென்னை: இன்று தொடங்கிறது ...... மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதைக்காக, அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதையடுத்து சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ள நிலையில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்குகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

metro,machines ,மெட்ரோ ,எந்திரங்கள்

இதனை அடுத்து 1 கிலோ மீட்டர் நீளம் உள்ள அடையாறு ஆற்றின் அடியில் 1 நாளைக்கு 10 மீட்டர் சுரங்கம் தோண்டப்படும் நிலையில், 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த பணியை மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் ஐ.ஏ.எஸ் மற்றும் மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன் அவர்கள் தொடங்கி வைக்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் முதற்கட்டமாக மாதவரத்தில் சுரங்கம் தோன்றும் பணி நடைபெற்று வருவகிறது.

Tags :
|