பிரேசிலில் உள்ள பிரமாண்ட இயேசு சிலை மீது மின்னல் தாக்கிய புகைப்படம்
By: Nagaraj Mon, 13 Feb 2023 09:06:40 AM
பிரேசில்: இயேசுவின் பிரம்மாண்ட சிலை மீது மின்னல் தாக்கிய நிகழ்வு குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது. இந்த பிரம்மாண்ட சிலை மீது மின்னல் தாக்கிய நிகழ்வு தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு அந்த புகைப்படம் மற்றும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 10ம் தேதி இந்த இயேசு சிலை மீது மின்னல் தாக்கிய நிலையில், இந்த இயற்கை நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2014ம் ஆண்டில் இந்த சிலை மீது மின்னல் தாக்கியது. இதன் காரணமாக சிலையின் விரல் சேதமடைந்தது. இந்த முறை மின்னல் தாக்கியதில் ஏதேனும் சேதமடைந்ததா என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்த படம் பெர்னாண்டோ பிராகா என்பவரால் பிடிக்கப்பட்டது. பதிவிட்டதில் இருந்து, இது 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.